search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரெவர் பெய்லிஸ்"

    50 சதவிகிதம் காயத்துடன் இருக்கும் விராட் கோலி அபாயகரமானவராக இருக்க முடியும் என்ற இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது விராட் கோலி பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் வலி இருந்ததால் களம் இறங்கவில்லை எனக் கூறப்பட்டது.

    லார்ட்ஸ் போட்டிக்குப்பின் தான் முதுகு வலியால் அவதிப்படுவதாக விராட் கோலி தெரிவித்தார். ஆனால் 3-வது டெஸ்டிற்கு முன் உடற்தகுதி பெற்று விடுவேன் என்றார். இருந்தாலும் விராட் கோலி 50 சதவிகித உடற்தகுதியுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் காயத்தோடு விளையாடினாலும் விராட் கோலி அபாயகரமானவர் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘அவர் காயம் எங்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தப்போவதில்லை. காயம் இருந்தாலும் அபாயகரமான வீரராக இருக்க முடியும். கிரிக்கெட் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், காயத்தோடி விளையாடி அதிக அளவில் ரன்களும், விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.

    இதுகுறித்து நாங்கள் பெரிய அளவில் யோசிக்கவில்லை. ஆனால், ஸ்லிப் திசையில் அவரது விக்கெட்டை வீழ்த்த முயற்சிப்போம்’’ என்றார்.
    ஜேம்ஸ் ஆண்டர்சனால் 40 வயது வரை சிறப்பாக பந்து வீச முடியும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 36 வயதாகும் இவர் இன்னும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவிற்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்டுக்கள் அள்ளி இந்தியா சீர்குலைய முக்கிய காரணமாக இருந்தார்.

    இதுவரை 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 553 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ள ஆண்டர்சனால் 40 வயது வரை விளையாட முடியும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

    ஆண்டர்சன் 903 புள்ளிகள் பெற்று டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இதன்மூலம் 1980-ம் ஆண்டு இயன் போத்தமிற்குப் பிறகு 38 வருடங்கள் கழித்து ஆண்டர்சன் 900 புள்ளிகளை நடது சாதனைப் படைத்துள்ளார்.

    ஆண்டர்சன் குறித்து பெய்லிஸ் கூறுகையில் ‘‘உலகில் இல்ல பெரும்பாலான பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால் 30 வயதை தாண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தை இழந்து விடுவார்கள். ஆனால் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசும் திறமையை பெற்றுள்ளார். அவருடைய பந்து வீச்சை பார்க்கும் போது மிகமிக சிறந்தவராக தோன்றுகிறார்.



    இதுபோன்ற சூழ்நிலையில் ஆண்டர்சன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். லார்ட்ஸ் டெஸ்டின் போது இருந்து வானிலை இருக்குமென்றால், உலகின் எந்தவொரு பேட்ஸ்மேன்களுக்கும் சோதனைத்தான்.

    அவருடைய வயது பற்றி நான் சிந்திக்கவில்லை. அவருடைய உடலை பிட்ஆக வைத்துள்ளார். இப்படி பிட் ஆக உடலை பாதுகாத்து வந்தால் அவரால் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் விளையாட முடியும்’’  என்றார்.
    இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள் மூலம் விராட் கோலியை நெருக்கடிக்கு உள்ளாக்குவோம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றியை நெருங்கியது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். விராட் கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், 2-வது இன்னிங்சில் 51 ரன்களும் சேர்த்தார்கள்.

    விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடுவதால், இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் விராட் கோலியை நெருக்கடிக்கு உள்ளாக்குவோம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டிரெவர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இல்லை. அந்த நிலையை நெருங்கி வருகிறார். முதல் இன்னிங்சிலும், 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி விளையாடியது உயர்தர ஆட்டம். இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுத்தால், அது விராட் கோலியிடம் சென்று அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும்.’’ என்றார்.
    ×